மகிழ்ச்சி தரும் மப்பேடு சிங்கீஸ்வரர் !
மகிழ்ச்சி தரும் மப்பேடு சிங்கீஸ்வரர் ! திருவள்ளுவர் மாவட்டம் மப்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது புஷ்ப குஜாம் பால் சமேத சிங்கீஸ்வரர் திருக்கோவில். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது அதிலிருந்து அமிர்தம் வெளிப்பட்டது
அமிர்தத்தை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக மோகினி வடிவம் எடுத்தவர் .
திருமால் தன்னுடைய மெய்யான திருநாள் வடிவத்தை பெறுவதற்காக அவர் வழிபட்ட தளம் தான் என்பதால் இத்தலம் மெய்ப்பேடு என்று சொல்லப்படுகிறது.
மெய்யென்றால் உண்மை என்பதையும் ,தேடு என்றால் பெண் என்பதையும் குறிப்பதாக சொல்லப்படுகிறது. மெய்ப்பேடு என்பது காலப்போக்கில் மருவி மப்பேடு என்றதாக வரலாறு கூறப்படுகிறது. தல வரலாறு;
திருவலங்காட்டில் சிவபெருமான் மூர்த்தவ தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார்திருச்செந்தூர் முருகன் கோவில் ! அப்போது மிருதங்கம் வாசித்த சிங்கி என்பவர் இசைப்பதில் கவனமாக இருந்ததால்
சிவபெருமானின் நடனத்தை காண முடியாமல் போனதாம் எம்பெருமானின் நடனத்தை காண முடியவில்லை
என்று மனம் வருந்தினார் அவர் அன்று இரவு அவருடைய கனவில் தோன்றிய
இறைவன் “மெய்ப்பேடு திருத்தளத்தில் உள்ள சிவலிங்கத்தை வழிபட்டால் எனது நடன காட்சி காணலாம் “என்று ஆசி வழங்கினார்.
மனமகிழ்வை அள்ளித் தரும் மப்பேடு சிங்கீஸ்வரர் !
அதன்படியே மெய்ப்பேடு சென்று வழிபட்ட சிங்கிக்கு சிவபெருமானின் திரு நடன காட்சி காணக் கிடைத்தது அருமை.
சிங்கி வழிபட்ட தலம் என்பதால் இவ்வாழையை ஈசனுக்கு சிங்கீஸ்வரர் என்று பெயர்.
சுவாமி சொன்னதுக்கு வலது புறம் அம்மன் சன்னதி அமைந்துள்ளது.
நறுமணம் மிகுந்த மலருக்கு உரியவள் என்ற பொருளில் புஷ்பா குஜாம்பாள் என்ற திருநாமத்துடன் அன்னை காட்சி தருகிறாள் தருகிறாள்.
இந்த அன்னை பூவூடை நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்! சதுரமான கருவறையில் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாய் வீற்றிருந்து அன்னை அருளாசி வழங்குகிறாள்.
அம்பாளின் கருவறை முன்பு உள்ள அர்த்தமண்டபம் இரு வரிசையில் https://youtu.be/qWNUyrweXj4நான்கு தூண்களாகவும் முன் மண்டபம் 12 தூண்களாலும் தாங்கி நிற்கின்றது.
இத்துடன் விஜயநகர கால பூ வேலைபாடுகள், இறை உருவங்கள், விலங்குகள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. விசுவநாத நாயக்கர் ஆட்சியில் அமைச்சராக புகழ்பெற்ற விளங்கியவர்.
ஆரியநாத முதலியார் இவர் திருமலை நாயக்கரிடம் அலுவலராக இருந்த காலத்திய அப்ப முதலியார் மகன் ஆவார் .இவர் பிறந்த ஊர் மேப்பாடு.
இவரை விசுவநாத நாயக்கர் காலம் முதல் இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் காலம் வரை முக்கிய ஆலோசகராக விளங்கியுள்ளார். இந்த ஆலயத்தின் ஐந்து நிலை ராஜகோபுரம், மதில் சுவர், கல் மண்டபம், வசந்த மண்டபம்.
முதலானவற்றை அறிய நாத முதலியாரே கட்டியதாக கூறப்படுகிறது. முந்தைய காலத்து தொண்டை நாடு 24 கோட்டயங்களையும் 79 நாடுகளையும் கொண்டு விளங்கியதை தொண்டை மண்டல சதகம் குறிப்பிடுகிறது.
செங்காடு கோட்டத்தில் செங்காடு நாட்டில் அமைந்த ஊராக மப்பேடு விளங்கியது. இந்த ஆலயத்தில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின்போது ஆலயத்தின் பிரதான கோபுர உச்சியில் கி.பி. 947 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வு அறிக்கையில் இரண்டாம் ஆதித்த கரிகால சோழன் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது
42 total views, 1 views today