குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன !

Spread the love

குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன ! தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காயாமொழி கிராமம் இங்கு பிரசித்தி பெற்ற சுடலைமாடன் கோவில் அமைந்துள்ளது.

இங்கு பேச்சியம்மன், குலக்கரை பேச்சியம்மன், பிரம்மசக்தி, இசக்கியம்மன், முண்டன் சாமி, செங்கடசாமி, காட்டேரி ,பெருமாள், வைணவ பெருமாள், ஐயம் பந்தி, சிவனந்த பெருமாள் உள்ளிட்ட தெய்வங்கள் அருள்பாளித்து வருகிறார்கள்.

இந்த கோவிலின் தலவிருட்சம் காரை மரமாகும். ஒரு காலத்தில் பாண்டிய நாட்டைச் சேர்ந்த வல்ல ராஜா என்ற மன்னன்

தன்னுடைய ஆட்சியில் பலரையும் கொடுமைப்படுத்தி வந்தான். மக்கள் மட்டுமின்றி ரிஷிகளும் முனிவர்களும் கூட அவனால் துன்பப்பட்டனர்.

இந்த நிலையில ஒரு முனிவர் மூலம் வல்ல ராஜா சாபத்தை பெற்றார். இவனுக்கு சுந்தர்ருக்கு ஊன்றுகோல் வழங்கிய பூண்டி ஊன்றீஸ்வரர் !பிறக்கும் குழந்தை பிரசவம் ஆனதும் அந்த குழந்தையின் உடல் உடனே பூமியை தொட்டுவிட்டால் அவன் அழிந்து விடுவான்.

அவனது நாடும் அழிந்துவிடும் மாறாக அந்த குழந்தை பூமியை தொடாமல் ஒரு நாள் இருந்துவிட்டால் அதற்குப் பிறகு ஒன்றும் ஆகாது என்பது மன்னனுக்கு ஏற்பட்ட சாபம்

இதற்கிடையே கர்ப்பவதியான வல்ல ராஜாவின் மனைவிக்கு பிரசவ வலி உண்டானது மன்னனுக்கு இருந்த சாபத்தால்

அவன் மனைவிக்கு பிரசவம் பார்க்க எவரும் முன்வரவில்லை. பிறக்கும் குழந்தை நலமாக இருக்க வேண்டும்

ஜாதக கதம்பம்: பேச்சி அம்மன்

குழந்தை வரம் அருளும் பேச்சியம்மன ! அதே நேரத்தில் தானும் அழியாக இருக்க வேண்டும் என கவலை அடைந்த மன்னன் தானே ஊருக்குள் சென்று பிரசவம் பார்க்கும் பெண்ணை தேடினால்

அப்போது அவன் முன்பாக வயதான பெண் வடிவத்தில் பேச்சியம்மன் தென்பட்டாள்.அவள் தெய்வப் பிறவி என்பதை அறியாத மன்னன்

அவளது உதவியை நாடினான் அதற்கு அந்த அன்னை நான் உன் மனைவிக்கு பிரசவம் பார்த்து அந்த குழந்தை பூமி தொடாதபடி பார்த்துக் கொள்கிறேன்

அதற்கு எனக்கு தேவையானதை தர வேண்டும் என்றால் மன்னனும் கேட்டதைhttps://youtu.be/Ne_c0p7yaiA தருவதாக வாக்களித்தான் அதன்படி மன்னனின் மனைவிக்கு பிரசவம் பார்த்த பேச்சியம்மன்

அந்த குழந்தையை பூமியை தொடாதபடி பார்த்துக் கொண்டார் ஒருநாள் முடிந்ததும் மன்னன் தன் வேலையை காட்டினான்.

దస్త్రం:Mariyamman.jpg - విక్షనరీ

பேச்சியம்மன் கேட்ட எதையும் கொடுக்காமல் அவரைக் கொல்ல முயன்றால்

ஆனால் தன் சுய உருவத்தை காட்டிய பேச்சியம்மன் மன்னனையும் அவன் மனைவியையும் வம்சாவளையும் அழித்து அங்குள்ள மக்களை காப்பாற்றினார்

இதனால் மக்கள் அனைவரும் அந்த அன்னையை கை கூப்பி தொழுதனர்

இதை அடுத்து பேச்சியம்மன் தன்னுடைய கோபம் தணிந்து சாந்தமானார் பின்னர் நான் காளியின் அவதாரம் என்னை வணங்கி வந்தால் நான் குடிகொண்டு ஊரை காப்பேன்

அவரவர் வீடுகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆகவும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நன்கு வளரவும் உதவுவேன்.

அனைவருக்கும் பாதுகாவலாக இருப்பேன் என்று உறுதி அளித்தாள் என்கிறது தல வரலாறு.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *