மகரம் ராசி மார்ச் மாத ராசி பலன் 2025:
மகரம் ராசி மார்ச் மாத ராசி பலன் 2025: மகரம்- உத்திரம் ,திருவோணம் ,அவிட்டம்.
கிரகநிலை.
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சந்திரன், சனி.

தைரியம் ஸ்தானத்தில் ராகு சுக்கிரன் புதன் ,
பஞ்சம ஸ்தானத்தில் குரு ,
ரன ரோக ஸ்தானத்தில் செவ்வாய் ,
பாக்கிய ஸ்தானத்தில் கேது.

கிரக மாற்றங்கள் :
4 /3 /2025 அன்று சுக்கிர பகவான் வக்கிரமடைகிறார்.14/3/2025 சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திலிருந்து தைரியம் வீரிய ஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.
18/3/2025 புதன் பகவான் தைரிய வீரிய சாணத்தில் இருந்துamanalingeswarar kovil தனவாக குடும்பஸ்தானத்திற்கு மாற்றம் பெறுகிறார்.
பலன்கள்:

உத்திரம் 2, 4 பாதங்கள்:
நண்பர்களின் உதவி சிறப்பாக அமையும் இருந்தாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்து பழகுவது ரொம்பவும் நல்லது.
எடுக்கும் முயற்சிகளை எதிர்நீச்சல் போட்டி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் அதனால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல பலனை உங்களால் இந்த மாதம் பெற முடியும்.
மாணவர்கள் கல்வியில் சற்று கவனமுடன் செயல் பட்டால் எதிர்பார்த்த இலக்கை நீங்கள் அடைய முடியும்.
திருவோணம்:

கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது வரலாம் உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரைக்கும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏதாவது சின்ன சின்ன உடல் பாதிப்புகள் வரும்.
திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும் புத்திரவளியில் நிம்மதி குறைவு பூர்வீக சொத்துகளால் வீண் செலவுகள் உண்டாகும் கவனமாக இருங்கள்.
கணவன் மனைவியுடைய சிறு சிறு கருத்து வேறுபாடுகள்https://youtu.be/PFKwJrS0waI தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது.
அவிட்டம்:
1 ,2 பாதங்கள் உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்துப் போவது மிகவும் நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்களை உங்களால் இந்த மாதம் பெற முடியும்.
இருந்தாலும் கூட்டாளிகள் அவர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. சற்று நிம்மதி குறையெல்லாம் கவனமாக உங்களது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் பயணங்களால் உங்களுக்கு இந்த மாதம் அணுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக நீங்கள் செயல்பட போகிறீர்கள்.
திருவோணம் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும் . உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.
திருமண சுப காரியங்கள் தடைகளுக்கு பின் நிறைவேறும் புத்திர வழியில் நிம்மதி குறைவாக இருக்கும்.

பூர்வீக சொத்துக்கள் வீண் செலவு உண்டாகும் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் இருந்தாலும் ஒற்றுமை எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.
உங்களுக்குமே உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் வந்தாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்போடு செயல்பட முடியும்.
பரிகாரம்:
சனிக்கிழமையில் விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி வழிபட்டு வருவதன் மூலம் காரியத்தடைகள் நீங்கும் எந்த ஒரு விஷயத்திலும் உங்களுக்கு நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள் திங்கள் ,வெள்ளி.
சந்திராஷ்டமதினங்கள் 12,13,14.
அதிர்ஷ்ட தினங்கள் 5,6,7.