பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்
பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம் கிரிவலம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தான் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
இந்த கிரிவலத்தை திருவண்ணாமலை கிரிவலம் என்றும் அருணாச்சலேஸ்வரர் கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

கிரிவலம் செல்வதால் பாவம் வினைகள் குறைந்து புண்ணியம் கூடும் தெய்வ அருள் மட்டுமின்றி சித்த புருஷர்களின் அருளும் முழுமையாக கிடைக்கும்
இயற்கையில் நல் அருளையும் நம்மால் பெற முடியும் கிழமைகள் அனைத்தும் திதிகளிலும் எல்லா நேரங்களிலும் கிரிவலம் செல்லலாம் என்றாலும் எந்த கிழமை எந்த சமயத்தில் கிரிவலம் சென்றால் என்ன பலன் என்பதனை பார்க்கலாம்.
திருவண்ணாமலையை தவிர பழனி திருப்பரங்குன்றம் திண்டுக்கல் நெற்றிக்கண்ணில் உதித்த பிரித்தியங்கரா தேவி!ரத்தனகிரி சோளிங்கர் வள்ளிமலை பர்வதமலை சென்னிமலை திருமயம் இப்படி மலைகள் இருக்கும்
பல இடங்களில் கிரிவலம் செல்லும் வழக்கம் எல்லோரிடத்திலும் உள்ளது எங்கெல்லாம் மலைகள் மீது ஆலயம் உள்ளதோ அங்கு அனைவரும் கிரிவலம் செல்வார்கள் கிரிவலம் சென்றால் என்ன பலன் என்ன பலன் கிடைக்கும்.
கிரிவலம் செல்லும் போது பக்தி பாடல்கள் கேட்டுக்கொண்டு செல்லலாம் நமக்கு அந்த பாடல்கள் தெரியும் என்றால் பாடிக்கொண்டே செல்லலாம்
எதுவும் தெரியவில்லை என்றால் நாமங்களை மட்டுமாவது சொல்லிக் கொண்டு செல்வது நல்லது சிவா ஆலயம் என்றால் ஓம் நமச்சிவாய என்றும்
முருகன் கோவில் என்றால் ஓம் சரவணபவ என்றும் அம்பாள் கோவில் என்றால் ஓம் சக்தி பராசக்தி என்று சொல்லிக் கொண்டும் செல்லலாம்.
கிரிவலம் செல்வதால் பாவா வினைகள் குறைந்து புண்ணியம் கூடும் https://youtu.be/2viqUwNdP5Uதெய்வாருள் மட்டுமின்றி சித்த புருஷர்களின் அருளும் முழுமையாக கிடைக்கும்.
பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்
எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதனை பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் சென்றால் சிவலோக பதவி கிடைக்கும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் நீங்கும்.
திங்கட்கிழமை பாவ கணக்குகள் குறைந்து புண்ணிய கணக்கு அதிகரிக்கும். செவ்வாய்க்கிழமை கடன் தீரும்
தீவினைகள் அகலும் வறுமை நீங்கும் சகல சம்பத்துகளும் தேடி வரும் கர்ம வினைகள் குறைய ஆரம்பிக்கும் என்ன நினைத்து கிரிவலம் சென்றோமோ அது கண்டிப்பாக காரியம் கைகூடி வரும்.
புதன்கிழமை கலைகளில் நல்ல ஒரு வளர்ச்சி கிடைக்கும் பாவங்கள் போக்கி மோட்சம் கிட்டும். வியாழக்கிழமை குரு அருள் கிடைக்கும்
நானா சித்தி ஏற்படும் இந்த ஜென்மம் மட்டுமின்றி பல ஜென்மங்கள் குருமார்களின் ஆசி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வதால் என்ன பலன்? மலைகளின் மூலிகை செடி நிறைந்திருக்கும்
இவற்றில் சில மூலிகைகள் பௌர்ணமி அமாவாசை போன்ற தினங்களில் மட்டுமே தனது முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கும்
அந்த சமயங்களில் நாம் மலையை வலம் வருவது மிகவும் சிறப்பு அந்த மூலிகைகளில் பேராற்றல் நமது உடலில் படுவதால் பலவிதமான நோய்கள் நீங்கும் நேர்மறையான எண்ணங்கள் அதிகரிக்கும்.