தும்பை பூவின் அற்புத பயன்கள்
தும்பை பூவின் அற்புத பயன்கள் ! தும்பை ரோட்டோரங்களையும் காட்டுப்பகுதிகளையும் வெள்ளை வெளேர்னு பூ பூத்து நிற்கும் இந்த செடி. சங்ககாலத்திலேயே தும்பை செடி பிரபலம்.
பட்டு மாதிரி ரொம்ப மென்மையான தும்பை பூவை மன்னர்கள் மாலை அணிந்துட்டு போனா போருக்கு தயாராகிட்டாங்கன்னு அர்த்தங்க.
ராவணன் போருக்கு போகும்போது தும்பை மாலையை அணிஞ்சிட்டு போனதா ராமாயணத்தில் குறிப்பு இருக்குதுங்க.
அதே மாதிரி ராவணனுக்கு எதிரா ராமன் துளசி மாலையையும் கூடவே தும்பை பூ மாலையையும் அணிஞ்சிட்டு போனதா கம்பர் சொல்லி இருக்காருங்க.

அந்த அளவுக்கு பிரபலமான தும்பை பூவை இட்லி சுடற சில பேர் தும்பை பூ மாதிரி மென்மையா இட்லி இருக்கணும்னு சொல்றாங்க.
சிறுகதை ஒன்னுல தும்பை பூவின் நிறத்தில் சோறு பரிமாறப்பட்டது என்று சொல்லி இருப்பாங்க. தும்பைச் செடியில போய் தொங்கிவிட்டு சாவுன்னு சில பேர் கேலி பேசுறதையும் கேட்டிருப்பீங்க.
தும்பை குப்பையில கேட்பாரில்லாமல் தானா வளர்ந்து கிடக்குதுங்க. அந்த மூலிகைக்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்குதுங்க.
அதனால இனிமே மழைக்காலத்தில் தெளிச்சு வளரக்கூடிய தும்பை இலையையும் பூவையும் எடுத்து பயன்படுத்த வேண்டும்.

சளி தொல்லையை போக்க கூடியதுங்க. மழைக்கால துறையும் குளிர்கால துறையும் சீதோசன நிலை எப்பவும் குளிர்ச்சியா இருக்குங்க.
முக்கியமா ராத்திரி அடிக்கிற பனியால பல பேருக்கு தலைவலி தலைபாரம் பிரச்சினை வரும்.
இந்த மாதிரி நேரங்களில் தும்பை பூவை பசும்பால் விட்டு அரைச்சியும் மெல்லிசான துணியில தடவி நெத்தியில பார்த்து போட்டான் நிவாரணம் கிடைக்குங்க.
ஜலதோஷம் இருமல்ன்னு அவதிப்படுறவங்க தும்பை பூவை தண்ணீர் விட்டு கொதிக்க வச்சு குடிச்சா பலன் கிடைக்குங்க.
சைனஸ் பிரச்சினை வந்து மூக்குல சில பேருக்கு ரத்தம் வடியும்.
அப்போ தும்பை பூவையும் தும்பை இலையையும் சம அளவு எடுத்து கசக்கி சாறு பிழிந்து காலையில் சாயங்காலமும் இரண்டு சொட்டு மூக்கு உள்ளே விட்டா பலன் கிடைக்குங்க.

தும்பை பூவின் அற்புத பயன்கள்
இல்லனா அந்த சாரை ஒரு பருத்தி துணியில் நனைச்சு மூக்குல வச்சு சுவாசிக்கலாம்.
அதே மாதிரி தும்பை பூவை நல்லெண்ணெயில் போட்டு காட்சி குளிச்சா தலைபாரம் சளி தொடர்பான நோய்களை இருந்து விடுபடலாங்க.
தும்ப இலை சாரோட கொஞ்சம் கல் உப்பு சேர்த்து சொறி சிரங்கு உள்ள இடங்களில் பூசி குளிச்சிட்டு வந்தா பிரச்சனை சரியாகும்
இந்த மாதிரி குளிக்கும் போது சீயக்காய் தேய்த்து குளிக்கிறது நல்லதுங்க. இதைத்தொடர்ந்து ஐந்து நாள் செஞ்சிட்டு வந்தா முழுமையான பலன் கிடைக்குங்க.

விஷ பூச்சிகள் கடிச்சா தும்பை இலை தும்பை பூ ரெண்டையும் சம அளவு எடுத்து சாறு எடுத்து கால் டம்ளர் குடிக்க வேண்டும்.
அதேபோல தும்பை இலையையும் தும்பை பூவையும் அரைத்து பூச்சி கடிச்சி இடத்துல பற்று போடணுங்க.
இந்த மாதிரி செஞ்சா எந்த பூச்சி கடிச்சாலும் விஷம் முறிஞ்சிடுங்க.
பாம்பு கடிச்சாலும் கூட இதே மாதிரி செஞ்சா ஒரு முதலுதவியா இருக்கும்.