திருப்பதி சென்றார் திருப்பம் வரும் ! !

Spread the love

திருப்பதி சென்றார் திருப்பம் வரும்! பல தடைகளை மீறி எப்படி திருப்பதி செல்வது!

அந்த காலத்துல திருப்பதிக்கு யாத்திரை போக வேண்டும் அப்படின்னா அது ஒரு பெரிய விஷயமாக பேசப்பட்ட இருக்கு.ஆனால் பெருமாளை தரிசனம் செய்யறது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது.

நாம் நினைத்தால் நம் வீட்டின் அருகில் இருக்கும் கோவில்களுக்கு செல்லலாம் ஆனால் பெருமாளே நினைத்தால் மட்டும் தான் நாம் அவளை தரிசனம் செய்ய முடியும் என்று பெரியோர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.

நிறைய பேருக்கு திருப்பதி செல்வதற்கு நேரம் காலம் கைகூடி வராது. பழனி தங்கத்தேர் வலம்வரும்போது முருகனின் சிலையில் நடந்த மாற்றம்! வெளியான வைரல் வீடியோஎப்போ திருப்பதிக்கு யாத்திரை போக வேண்டும் என்று நினைத்தாலும் தடைகள் நேரும். எந்த தடையும் இல்லாமல் பெருமாளை எப்படி தரிசனம் செய்வது என்று பார்க்கலாம்.

திருப்பதி யாத்திரைக்குச் செல்ல முடியவில்லை எம் பெருமானை தரிசனம் செய்ய நேரமும் காலமும் கைகூடி வரவில்லை என்றால் ஒரு சிறிய மண் உண்டியலை வாங்கி உங்களுடைய வீடுகளில் வையுங்கள்.

அந்த உடலுக்கு மேலே ஒரு நாமத்தை போடுங்கள். அந்த உண்டியலில் நாணயத்தை தினம்தோறும் போடுங்கள்.

உங்களிடம் எப்பொழுதெல்லாம் போதுமான பணம் இருக்கிறதோ https://youtu.be/nAFSmv4Dswkஅப்பொழுதெல்லாம் இது வேங்கடவனுக்கு உரியது என்று தனியாக பணத்தை ஒதுக்கி வையுங்கள்.

பெருமானே உன்னை தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த பிறகு தொடர்ந்து உண்டியலில் நாணயத்தை போட்டு வாருங்கள்.

உங்களுக்கு எப்பொழுது திருப்பதி செல்லும் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுது இந்த உண்டியல் பணத்தை திருவேங்கடவனின் உண்டியலில் போட்டு விடுங்கள். இப்படி செய்வதால் தடைபட்டு வந்த பயணம் கை கூடும்.

சீனிவாசனை தரிசிக்க சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். வீட்டிலிருந்து கிளம்பும்போது பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள்.

அதன்பிறகு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் இந்த தாம்பூலத்தை பூஜை அறையில் வைத்து விட்டு தடங்கல் இல்லாமல் ஏழுமலையான் தரிசனத்தை பெற வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு வீட்டில் இருந்து யாத்திரைக்கு புறப்பட வேண்டும்.

திருப்பதிக்குப் போகும் பொழுது முதலில் அலமேலுமங்கம்மாவை தரிசனம் செய்துவிட்டு தான் மேல் திருப்பதிக்கு செல்ல வேண்டும்.

கீழே தாயாரிடம் முதலில் உங்களுடைய மன கவலைகளை சொல்லிவிடுங்கள். தாயார் எல்லா விஷயங்களையும் பெருமாளிடம் சொல்லி உங்களுடைய கஷ்டங்களை தீர்த்து வைப்பார்.

தாயாரின் தரிசனம் செய்யாமல் திருப்பதிக்குச் சென்று பெருமாளை தரிசனம் செய்வது எந்த விதமான முழு பயனையும் நமக்கு அளிக்காது.

அலமேலுமங்கா புரத்தில் இருக்கும் தாயார் தரிசனம் செய்துவிட்டு அடுத்தத ஏறலாம்.

பின் மேல் திருப்பதியில் இருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் கோவிந்தராஜ் தரிசனம் செய்து உங்களுடைய வீடு திரும்பலாம்.

மேலும் உங்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்க வேண்டுமெனில் திருப்பதியில் உள்ள பாபவிநாசம் தீர்தத்தில் நீராட நீங்கும்.

இது போன்ற ஒரு பயனுள்ள தகவல் உங்களுக்கு வேணும் அப்படின்னா எங்களை பின் தொடருங்கள்

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *