சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி !
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உத்தரவுப்பெட்டியில் 7 எலுமிச்சம் பழம்,விபூதி வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது.
சில தினங்களுக்கு முன்பு போகர் படம் வைத்து பூஜை செய்ய உத்தரவான நிலையில் மீண்டும்அந்த பொருள் மாற்றப்பட்டது.
மருத்துவ குணம் நிறைந்த விபூதியும் எலுமிச்சையும் வைத்து பூஜை செய்ய உத்தரவாகியுள்ளது.
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவில்காமாட்சி அம்மன் விளக்கைப் பற்றி தெரியுமா ?? இது ஆகும்.1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.

திருதலத்தில் மூலவராக, சுப்ரமணியர், வள்ளியுடன் ஒரே கருவறையில் திருமண கோலத்தில் எழுந்தருளி காட்சி தருகிறார்.
மலைச்சாரலில் தினைப்புனம் காத்துக்கொண்டிருந்த வள்ளியம்மையை, காதல் மணம் புரிந்து, முருகன் குடியேறியதாகவும், அதனால்தான் இத்தலத்தில் முருகன், சுப்பிரமணியராக வள்ளியுடன் காட்சி தருகிறார் என்று நம்பப்படுகிறது.
ஆலயத்தில் ஏப்ரல்1 தேதி கடலூரை சேர்ந்த பக்தரின் கனவில் தோன்றியதாக கூறி,
18 சித்தர்களில் ஒருவரான போகர் சித்தரின் உருவப்படம் வைத்து பூஜை செய்து, பின்னர் உத்தரவு பெட்டிக்குள் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இதனையடுத்து மாற்றம் எதுவும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் எழுந்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 3ம் தேதி கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த காமராஜ் என்ற பக்தரின் கனவில் சுப்பிரமணியர் தோன்றியதாக கூறி,
3 கிலோ விபூதி மற்றும் 7 எலுமிச்சம் பழங்கள் வைத்து பூஜை செய்ய உத்தரவிடப்பட்டது.
உத்தரவு பெட்டிக்குள் வைத்திருந்த போகர் உருவப்படம் மற்றப்பட்டு, 3 கிலோ விபூதி மற்றும் 7 எலுமிச்சம் பழங்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.பக்தர் கனவில் இறைவன் தோன்றி தெரிவிக்கும் வரை இந்த பொருட்கள் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வெயில் காலம் என்பதால் மக்களின் நோய்கள் நீக்கும் மருத்துவ https://youtu.be/AsBBTvOfm84குணம் நிறைந்த எலுமிச்சையும், விபூதியும் வைத்து உத்தரவுப்பெட்டியில் பூஜை செய்யப்படுகிறது.
சிவன்மலை ஆண்டவன் உத்தரவுபெட்டியில் ஏர் கலப்பை, தங்கம், ரூபாய் நோட்டு, துப்பாக்கி, மண், ஆற்று மணல், தண்ணீர், உப்பு, பூமாலை, துளசி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.
ஆண்டவர் உத்தரவு உடன் கண்ணாடிப்பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
நேர்மறை தாக்கமகவோ அல்லது எதிர் மறை தாக்கமாகவோ இருக்கலாம்.
பக்தர் ஒருவரின் கனவில் சாமி தோன்றி பெட்டியில் வைக்க வேண்டிய பொருள் பற்றி கூறுவார்.
மறுநாள் அருள் வந்த நிலையில், அந்த நபர் தனது கனவில் சுவாமி தோன்றி சொன்னது குறித்து கோயில் நிர்வாகியிடம் வந்து தெரிவிப்பார்.
அவர் சொன்னது உண்மை தானா என்று தெரிந்து கொள்ள கோயில் நிர்வாகிகள் பூக்களை பொட்டலத்தில் வைத்து அதை சாமி முன்பு போட்டு பூச்சயனம் கேட்பார்கள்.
அதில் முதல் எடுப்பிலே வெள்ளைப் பூ வந்தால் முருகன் கனவில் தோன்றி கூறியது உண்மை தான் என உறுதி செய்து கொண்டு அந்த பொருளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அந்த பெட்டியில் வைத்து விடுவார்கள்.