கார்த்திகை விரதம் இருப்பதால் கந்தன் தரும் வரம்..

Spread the love

கார்த்திகை விரதம் இருப்பதால் கந்தன் தரும் வரம்.. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை என்பது பழமொழியா கூறப்படுது.அந்த முருகப்பெருமானை துதித்து வழிபட உகந்த நட்சத்திரம் எதுன்னு பார்த்தா அதுதாங்க

கார்த்திகை நட்சத்திரம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு மிகப்பெரிய பெருமை உண்டு என்பது உண்மைதாங்க நட்சத்திரத்தின் பெயரும் மாதத்தின் பெயரும் ஒன்றாக வருவது தாங்க

அதன் சிறப்பு மேலும் கை என்ற எழுத்தில் முடியும் மாதமும் இதுதாங்க வாழ்க்கை சிறப்பாக இருக்க நம்பிக்கை வைக்க வேண்டிய மாதம் கார்த்திகை மாதம் தாங்க.

ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கூட கார்த்திகை மாதத்தில் வாடாமல்லையின் அற்புத பலன்கள் :வரும் கார்த்திகை நட்சத்திரத்தை தான் திரு கார்த்திகை என்று நாம் பெரிய கார்த்திகை என்றும் அடைமொழி சூட்டி அழைக்கின்றோம்.

ஊர்களுக்கு திரு என்று அடைமொழி சேர்ந்திருப்பதை பார்த்திருப்பிருப்போம். திருமயம், திருப்பத்தூர், திருவாடனை, திருவாடுதுறை, திருவாரூர், திருப்புங்கூர் போன்ற எண்ணற்ற ஸ்தலங்கள் திரு என்ற அடைமொழியுடன் இருப்பதை நாம ஏராளமாக பார்த்திருவோம்.

சிறப்பான தளங்கள் அமைந்த ஊர்களின் பெயர்களுக்கு திரு என்ற அடைமொழி சேர்ந்திருப்பதைப் போலத்தான் நட்சத்திரத்திற்கும் திருஎன்ற சேர்த்துக் கொண்டாடுவதுதான் இந்த கார்த்திகை மாதம் மட்டும்தான்.

மேலும் அது மட்டுமல்லாமல் கந்த சஷ்டி சூரனை வெற்றி கொண்ட வேல் என் வெற்றி கணிப்போடு இருக்கும் மாதமும் கூட இந்த கார்த்திகை மாதம் தான்.

அதுமட்டுமல்லாமல் இமாதத்தில் பிறந்தவர்களுக்கு கார்த்திகேயன் கார்த்திக் அதன் சம்பந்தப்பட்ட பெயர் வைப்பது வழக்கமாகவும் தமிழ் மக்கள் வைத்துள்ளனர்.

மேலும் கந்தன் பெயரை சூட்டினால் என்னாலும் இனிய நாளாக அமையும் https://youtu.be/8IFCXAi0lTMஎன்பது நம்பிக்கையாகவும் வைத்துள்ளனர்.

மேலும் அப்படிப்பட்ட பெருமைக்குரிய திருக்கார்த்திகை அன்று பெரியசாமி வேலுசாமி கந்தசாமி என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய ஆறுமுகசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு

விரதமும் இருந்து வழிபட்டால் அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை வழங்குவார் என்பது நம்பிக்கையாக தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட வருகிறது.

திருக்கார்த்திகை தினத்தன்று முருகப்பெருமானை உள் அன்போடு வழிபட்டால் நல்ல காரியங்கள் நடந்து கொண்டே இருக்கும்.

பெண்களுக்கு நல்ல கணவன் அமையவும், ஆண்களுக்கு நல்ல மனைவி அமையவும் குழந்தை செல்வம் பெறவும்,

பெற்ற குழந்தைகள் கல்வி செல்வம் பெறவும், அறிவு வளமும் செல்வம், கூப்பி தொழுவது இந்த நாளில் மிகவும் சிறப்பு கூறிய ஒன்றாக அமையும்.

Read all Latest Updates on and about Viratham

கார்த்திகை தினத்தன்று கார்த்திகை விரதம் இருப்பவர்கள் கந்தனுக்கு பிடித்த கந்தரப்பம் நெய்வேத்தியமாக வைப்பது அந்த விரதத்தின் மிகவும் சிறப்பான அம்சமாக கருதப்படுது.

மேலும் கந்த சஷ்டி கவசம் சண்முக கவசம் போன்ற கவசங்களை பாராயணம் செய்வதும் உகந்த ஒன்றாக சொல்லப்பட்டு வருகிறது.

மேலும் ஜோடியை வலியுறுத்தும் விதத்தில் ஜோதி வடிவான இறைவனை வழிபட சொக்கப்பனை ஏற்றி வழிபாடு செய்வதும்  வழக்கம்.

திரிசங்கு மன்னன் முதல் எண்ணற்ற மன்னர்கள் இந்த வழிபாட்டின் மூலம் இழந்த நாட்டை திரும்ப பெற்றதாக பல புராணங்களும் கூறுகின்றது.

Loading


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *