ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி !
ஓம் சக்தி கோவிலுக்கு விரதம் இருப்பது எப்படி !எல்லோரும் மார்கழி மாதம் பிறந்தவுடன் அனைவரும் விரதம் இருப்பாங்க. அவங்க எந்தெந்த முறையில விரதம் இருக்கணும் எப்படி விரதம் இருக்கணும் பற்றி பார்க்கலாம்
விரத நாட்களில் ஒருவேளை உணவை தவிர்க்க வேண்டும் ஐம்புலன்கள் அடங்கிய மனக்கட்டுப்பாட்டுகளுடன் தீய பழக்கங்களை தவிர்த்து
தங்களுடைய கடமைகளை செய்து கொண்டு அன்னையின் திருநாமத்தை நினைவில் எப்போதும் நிறுத்தி வழிபட வேண்டும். உறங்கும் போது செவ்வாடையின் மீது படுத்து உறங்க வேண்டும்
விரத நாட்களில் அந்தந்த மாலை எண்ணிக்கைக்கு உரிய சிவப்பு அல்லது மஞ்சள் நிற உடைகளையே கண்டிப்பாக இருக்க வேண்டும்
மிதியடிகளை தவிர்க்க வேண்டும் காலை மாலை இருவேளையிலும் நீராடி வழிபட வேண்டும்
காலை தம் வீட்டில் உள்ள அன்னையின் திருஉருவப்படத்தின் முன் அம்மாவின் திருநாமத்தை பாடல்களையும் பாடி வழிபடுவது அவசியம்
மாலை வேலைகளில் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கோ ஜூன் 5 முதல் ஜூன் 11 வரை 12 ராசிக்கும் என்ன பலன்அம்மன் ஆலயத்திற்கு சென்று கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.
அன்னை தன் அருள்வாக்கில் அருளிய வண்ணம் ஐவரு குழுவாகவோ மூவர் குழுவாகவோ குடும்பங்கள் தங்களுக்குள் சேர்ந்து கொண்டு
ஒவ்வொருவரும் வீட்டிற்கு மற்றவர்களை சென்று அவர்கள் வீட்டுக்கு திருஷ்டி கழித்துவிட்டு கூட்டு வழிபாடு செய்துவிட்டு அவர்கள் வீட்டில் அளிக்கும் உணவை உண்ண வேண்டும்.
மேல்மருவத்தூர் புனித பயணம் எவ்வாறு செய்ய வேண்டும் சக்திமாலை அணிந்தவர்கள் மேல்மருவத்தூர் புனித பயணம் துவங்கும் முன்
யாரேனும் ஒரு ஏழை வீட்டுக்கு சென்று செவ்வாடை மீது இருமுடி இறக்கி வைத்து அவர்களுடன் கூட்டு வழிபாடு நடத்தி தான் தம்முடைய நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
ஓம் சக்தி வழிமுறைகளை பின்பற்றி உணவை தயாரித்தோ அல்லது கொண்டு சென்றோ அவர்களுக்கு முதலில் உணவு அளித்துவிட்டு
பின்னர் அங்கு சென்ற சக்திகள் உணவு அருந்த வேண்டும் அந்த ஏழை வீட்டுக்கு முடிந்த அளவு ஆடை தானம் செய்வது சிறப்பு
பயணம் துவங்குபவர்கள் சற்று தூரம் நடந்து வர வேண்டும் தனி வண்டியில் வருபவர்கள்
வண்டியில் அன்னையின் திருவுருவப்படத்தை பொருத்தி மாலையிட்டு ஆராதனை செய்து வண்டியைச் சுற்றி வந்து எலுமிச்சை பழம் பிழிந்து பிழிந்து ஊற்றி ஏற வேண்டும்
முடிந்தவரை இரவு நேரங்களில் பயணம் தவிர்க்கப்பட வேண்டும்.
உந்து https://youtu.be/NK-iwJeAXxAவண்டியில் வருபவர்களும் சக்தி மாலை செலுத்திய பெண் வீட்டில் செல்பவர்களுக்கும் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மிகாமல் பயணம் செய்ய வேண்டும்
இரு முடியை பையை தோளில் அல்லது தலையில் ஆடைக்கேற்ப எடுத்துச் செல்ல வேண்டும்.
இயற்கை கடனை கழிக்க வேண்டி இருப்பின் இருமுடியை உடன் வரும் மாலை அணிவித்தவர்களிடம் தந்துவிட்டு செல்ல வேண்டும்
தரையில் வைக்கும் போது செவ்வாடை பரப்பி அதன் மேலே இரு முடியை வைக்க வேண்டும் மேல்மருவத்தூர் சித்தர் பீடத்திற்குள் வரிசையாக மந்திரங்களை மனதிற்குள் சொல்லிக்கொண்டு மௌனமாக வரவேண்டும்